அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..!
நபி ஸல் கூறினார்கள் :
‘அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1909
என்று நபி ( ஸல் )சொல்லி இருக்கும் போது ,
அதன் அடிப்படையில் துல் கவ்தா மாதம் 29 இல் தமிழகத்தில் பிறை பார்க்கப் பட்டது ,
பிறை எங்குமே தென்படாத காரனத்தால் . நபி வழி படி அம் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து 18.11.10 அன்று தான் பெருநாள் கொண்டாட வேண்டும் .
‘மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907
ஆனால் இந்த சங்கமானது 17.11.10 அன்று கொண்டாடியது .
கொண்டாடியது மட்டும் அல்ல ,
அதை சிறப்பித்து மூன்று (S.W JAMAATH) பள்ளிகளுக்கு குளிர்பானங்களை கொடுத்தது ,
அல்லாஹ் கூறுகிறான் :
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய் உடன் கலக்காதீர்கள் .
உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் .
QURAN (2:42)
..அனால் அவர்களின் ஒரு பிரிவினர் , அறிந்து கொண்டே உண்மையை மறைகின்றனர் .
QURAN 2:146
நபி (ஸல்) கூறினார்கள் :
ஒருவரிடம் மார்க்க கல்வி பற்றி கேட்கப் பட்டது . (அவர் அறிந்திருந்தும் ) அதை மறைத்தால் , கியாமத் நாளில் அன்று அல்லா அவரது வாயில் நெருப்பு கடிவாளத்தை அணிவிப்பான் .
:அபூ ஹுரைரா ரலி
:அபூ தாவூத் .
18.11.2010 தான் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று அறிந்திருந்தும் . அதை மறைத்து (PIWA) ஊரோடு ஒத்துபோகிறது .
நாங்களும் குர் ஆன் & சுன்னா வை தான் பின்பற்று கின்றோம் என்று சொல்லியிருப்பவர்கள்
இந்த பெருநாள் கொண்டாடத்தில் ஊருடன் ஒத்து போனார்கள் ,
கொள்கையில் உறுதி இல்லாமல் இந்த போலி ஒற்றுமை வாதிகளை இனம் காட்டிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் .!!
குர் ஆன் & சுன்னா வை மறைக்கும் இந்த சங்கம் எப்படி மறுமை வெற்றிக்கு பயன் அளிக்கும் .
அன்பு சகோதரர்களே .
நடு நிலையுடன் சிந்தியுங்கள்.....!
செயல்படுங்கள் ....!
இப்படிக்கும் .
குர் ஆன் & சுன்னா ஊழியன்
அன்வர் அலி .அ